சென்னை: சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மாட்டோம். ஓபிஎஸ் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தாகும் என்று ஜெயக்குமார் கூறினார். சென்னை ராயபுரத்தில் நேற்று அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது:அரசியல்வாதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கலாம், புகழேந்தியின் கருத்துக்கு பதில் கூற வேண்டிய தேவையில்லை. சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.