புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 10 நாட்களுக்கு பின் கோவாக்சின் தடுப்பூசி போடும் பணி நடைபெறுவதால் முகாம்களில் முண்டி அடித்துக்கொண்டு திரண்ட மக்கள் டோக்கன் கொடுக்கும் நபரை கீழே தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் கட்டுக்குள் வர தொடங்கியுள்ளது. பல இடங்களில் இயல்பு வாழ்க்கையைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். இருப்பினும் கொரோனா 3ம் அலை பரவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல இடங்களில் பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி கையிருப்பு இல்லாத சூழல் உருவாகிறது. இந்நிலையில் புதுக்கோட்டையில் 10 நாட்களுக்கு பின் கோவாக்சின் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
