சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிவிப்பு: கர்நாடகா மேகேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என்று அடம்பிடிக்கிறது. இதனைக் கண்டித்தும், மேகேதாட்டு அணையைத் தடுத்து நிறுத்த மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அமமுக சார்பில் வருகிற ஆகஸ்ட் 6ம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 11 மணி அளவில் தஞ்சாவூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.