லண்டன்: கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. மகளிர் அரையிறுதி போட்டிகள் நேற்று நடந்தது. நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டி, ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பருடன் மோதினார். இதில் 6-3,7-6 என்ற செட் கணக்கில் ஆஷ்லி பார்டி வெற்றி பெற்று முதன்முறையாக விம்பிள்டன் தொடரில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். வெற்றிக்கு பின் 25 வயதான ஆஷ்லி பார்டி கூறுகையில், விம்பிள்டனில் இறுதிப் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது நம்பமுடியாதது என்று நான் நினைக்கிறேன். கெர்பர் நம்பமுடியாத போட்டியாளர். சாம்பியன் வீராங்கனை. அவருக்கு எதிராக எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று எனக்கு தெரியும். அதனை என்னால் செய்ய முடிந்தது என நினைக்கிறேன், என்றார். மற்றொரு அரையிறுதியில், 8ம் நிலை வீராங்கனையான செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா( 29), 2ம் நிலை வீராங்கனை பெலாரசின் அரினா சபலென்கா (23)உடன் மோதினார்.