பாட்னா: பாஜ பக்கம் சாய்ந்து வரும் லோக் ஜனசக்தி கட்சியின் சிராக் பஸ்வானை தங்கள் பக்கம் இழுக்க தேஜஸ்வி யாதவ் காய் நகர்த்துகிறார். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான், லோக் ஜனசக்தி கட்சியினை வழிநடத்தி வந்த நிலையில் அவருடைய சித்தப்பாவான (பஸ்வானின் தம்பி) பசுபதி குமார் பராஸ் உள்ளிட்ட சில எம்.பிக்கள் திடீரென சிராக் பஸ்வானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். கட்சியையும் கைப்பற்றியதாக அறிவித்துள்ளனர். இந்த பிரச்னையில் பிரதமர் மோடி தலையிட்டு தனக்கு உதவ வேண்டும் என சிராக் தெரிவித்துள்ளார். இதன்மூலம், மீண்டும் அவர் பாஜ பக்கம் சாய்வதாக தெரிகிறது.