சிட்னி: மிகத் திறமையான வேகப் பந்துவீச்சாளர்கள் அதிகம் இருப்பது இந்திய அணிக்கு சாதகமான அம்சமாகும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் அபாரமாக வென்ற இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பை பைனலில் அடுத்த மாதம் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு பலம் குறித்து இயான் சேப்பல் கூறியதாவது: கடந்த நூற்றாண்டை விட, தற்போதைய நிலையில் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை மிகவும் சிரமம் மிகுந்ததாக மாறியுள்ளது. வைரஸ் தொற்று இல்லாத பயோ பபுள் சூழலில் நீண்ட நாட்களுக்கு இருக்க வேண்டியது மிகவும் சிரமமானது. முன்பை விட அதிகம் சம்பாதிக்கும் வாய்ப்பு இருந்தாலும், இதிலும் பின்னடைவுகள் இருக்கத்தான் செய்கின்றன.