இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விமானப்படை தளபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை Apr 28, 2021 மோடி ஏர் தலைமை மார்ஷல் டெல்லி: இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியாவுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக டெல்லி, மராட்டியம் போன்ற மாநிலங்களில் இந்த தட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியாவுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். பிரதமர் அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் விமானப்படையின் பங்களிப்பை அதிகப்படுத்துவது குறித்து பிரதமர், விமானப்படை தளபதி இடையே ஆலோசிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா பரவியர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 97 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது.
இடைக்கால ஜாமீன் கேட்டு இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் ஜூன் 5ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி சிறப்பு நீதிமன்றம்
எம்.பி ஸ்வாதி தாக்கப்பட்ட விவகாரம் கெஜ்ரிவால் உதவியாளருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு
சான்பிரான்சிஸ்கோவுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் நீண்ட நேர தாமதம் ஏசி செயல்படாததால் பயணிகள் மயக்கம்
நாடு முழுவதும் வாட்டி வதைக்கும் வெயில் 25 தேர்தல் அதிகாரிகள் உள்பட 61 பேர் ஒரே நாளில் பலி: மக்களவை தேர்தல் இறுதிகட்டத்தில் பரபரப்பு
தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை கேரளாவில் 6 நாட்கள் பலத்த மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சர்வாதிகாரத்திடம் இருந்து நாட்டை காப்பாற்ற மீண்டும் சிறை செல்கிறேன்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உருக்கம்
கோடை விடுமுறையில் அலைமோதும் கூட்டம் திருப்பதியில் 30 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்: 3 கி.மீ. தூரம் நீண்ட பக்தர்கள் வரிசை