போர்ஷே கிராண்ட் பிரீ ஆஷ்லி பார்தி சாம்பியன்

ஸ்டட்கர்ட்: ஜெர்மனியில் நடைபெற்ற போர்ஷே கிராண்ட் பிரீ டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸி.) சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவுடன் (22 வயது, 7வது ரேங்க்) மோதிய ஆஷ்லி 3-6, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றினார். இந்த தொடரில் முதல் முறையாக களமிறங்கிய அவர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இது அவரது 11வது சாம்பியன் பட்டம் என்பதுடன், நடப்பு சீசனில் 3வது பட்டமாகும். இதே தொடரின் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் ஜெரிமி பிராடியுடன் இணைந்து களமிறங்கிய ஆஷ்லி, இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் டிசைரே கிராவ்க்ஸிக் - பெதானி மேட்டக் ஜோடியை 6-4, 5-7, 10-5 என்ற செட் கணக்கில் போராடி வென்று பட்டத்தை தட்டிச் சென்றார். மகளிர் ஒற்றையர் உலக தரவரிசையில் ஆஷ்லி தொடர்ந்து 70வது வாரமாக முதலிடத்தில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: