சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வரசித்தி விநாயகர் கோவில் அருகே பவானி ஆற்றில் பழைய துணிகள் அதிக அளவில் தேங்கி உள்ளதால் அப்பகுதியில் நீர் தேங்கி நின்று மாசுபடும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, சத்தியமங்கலம் சார்பு நீதிபதி ஈஸ்வரமூர்த்தி தலைமையில் பிசிடி டிரஸ்ட் என்ற தனியார் அமைப்பைச் சேர்ந்த நந்தகுமார் மற்றும் தன்னார்வலர்கள், சத்தியமங்கலம் காவல்துறையினர் ஆகியோர் இணைந்து 10க்கும் மேற்பட்டோர் நேற்று காலை சத்தியமங்கலம் பவானி ஆற்றுப் பாலம் அருகே உள்ள வரசித்தி விநாயகர் கோவில் படித்துறையில் பவானி ஆற்றில் கிடந்த பழைய துணிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.