இந்த நிலையில், இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பாஜக தமிழ்நாடு அமைப்புச் செயலாளரான கேசவ விநாயகனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து, எந்த காரணமும் தெரிவிக்காமல் சம்மன் அனுப்பியுள்ளதாகக் கூறி சம்மனையும், வழக்கையும் ரத்து செய்யக்கோரி கேசவ விநாயகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படும் புலன் விசாரணை சட்டவிரோதமானது. எனவே, இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வில் நீதிபதி சி.சரவணன் முன்பாக இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
The post ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; வழக்கை ரத்து செய்ய தமிழக பாஜ வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை appeared first on Dinakaran.