இந்த நிலையில் காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: காவலர்கள் பேருந்தில் பயணிக்கும்போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். கைதிகளை அழைத்து செல்லும் போது அதுவும் வாரன்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்த தொகையும் போக்குவரத்து துறை சார்பில் கிளைம் செய்து கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தின் போது பேருந்து நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் ெதரிவித்தனர்.
The post வாரன்ட் இருந்தால் மட்டுமே கட்டணமின்றி பயணிக்கலாம்; பஸ்சில் போலீசாருக்கு இலவச பயணம் கிடையாது: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.