வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் ஸ்டிக்கர் வழங்குவது போல, மருத்துவர்களுக்கும் வழங்குவது குறித்து தேசிய மருத்துவ ஆணையத்திடம் கருத்து கேட்கலாம் என்று கூறினார். இதற்கு பதில் அளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், மருத்துவ ஆணையத்தையும் வழக்கில் இணைக்கலாம் என்றார். இதையடுத்து, தேசிய மருத்துவ ஆணையத்தையும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலையும் வழக்கில் இணைக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 14ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதுவரை, வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்றும், மருத்துவ கவுன்சிலின் வாதத்தை கேட்ட பிறகு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கூறினார். அதேநேரத்தில் மருத்துவர்கள் ஸ்டிக்கரை தவறாகப் பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதி கூறினார்.
The post வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட டாக்டர்களுக்கு விலக்கு; விதி மீறினால் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம்: சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு appeared first on Dinakaran.