விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நேற்றுமுன்தினம் இறுதி கட்ட பிரசாரம் நடந்தது. திமுக மற்றும் அதிமுகவினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். திமுகவினருக்கு மாலை 5 முதல் 6 மணி மணி வரையும், அதிமுகவினருக்கு 6முதல் 7 மணி வரையும் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. நேற்றுமுன்தினம் மாலை அதிமுகவினர் சார்பில் விராலிமலை செக்போஸ்ட்டில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மாலை 5.40 மணி அளவில் திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் செக்போஸ்ட்டில் பிரசாரம் மேற்கொள்ள வந்தபோது கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்ததால் பிரசாரம் தடைபட்டது. இதனால் இரு கட்சி தொண்டர்களுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டு பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து பிரசாரத்தை முடித்து கொண்டு திமுக வேட்பாளர் இலுப்பூருக்கு சென்றார்.