புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் அதிமுக ஊராட்சி செயலர் துரை உள்பட 5 பேர் வீடுகளில் ஐ.டி. சோதனை நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் வழங்க வீட்டில் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வி.கோட்டையூரில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ராமதிலகம்மாள் வீட்டில் ஐ.டி. சோதனை நடைபெற்று வருகிறது.