தாம்பரம்: தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ம.கரிகாலன், தொகுதிக்கு உட்பட்ட பதுவஞ்சேரி பகுதியில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதியில் நீண்டகாலமாக வசித்து வரும் நரிக்குறவர்கள், அவர்களது தலைவர் மகன் திருமண நிகழ்ச்சியில் ஒன்றுகூடி இருந்தனர். அப்போது, கரிகாலன் அந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்ததை பார்த்த அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, அவருக்கு ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்றனர். பின்னர், அந்த திருமணத்தை கரிகாலன் தலைமை வகித்து நடத்தி வைத்தார். தொடர்ந்து, அவர்களுக்கு என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை பற்றி கேட்டதோடு, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கொண்டுவந்து முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் தொகுதியை நிச்சயம் மாற்றுவேன்.