சென்னை: 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வை நடத்தி மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. 11ஆம் வகுப்பு சேர்க்கை எப்படி நடத்துவது என்ற குழப்பம் இருந்த நிலையில் பள்ளி அளவில் பொதுத்தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வுகள் நடத்துவதை உறுதி செய்ய மாவட்ட பள்ளி கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு அடிப்படையில் வினாத்தாள்களை தயார் செய்யவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
