ஊராட்சி தலைவரை தாக்கிய 2 பேர் கைது

சேத்தியாத்தோப்பு, மார்ச் 9: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மா.உடையூர் கிராமத்தில் மாசி மக சுவாமி ஊர்வலத்தில் குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. அப்போது இதை தட்டி கேட்ட ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் உருட்டுக்கட்டையால் தாக்கபட்டார். இதில் பலத்த காயமடைந்த ஊராட்சி மன்ற தலைவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிந்து ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய வழக்கல் மா. உடையூர் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் (32), ஆதித்யா (22) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்….

The post ஊராட்சி தலைவரை தாக்கிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: