தங்கவயல்: தங்கவயல் அரசு முதல் நிலை கல்லூரி என் ஏ ஏ சி. எனப்படும் தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சிலின் தர சான்று ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. தங்கவயலில் கடந்த 2007ம் ஆண்டு அரசு முதல் நிலை கல்லூரி தொடங்கப்பட்டது. இங்கு வணிகம், கலை, அறிவியல், மேனேஜ்மென்ட் ஆகிய படிப்புகளும் மொத்தம் 1628 மாணவர்களுடன் கடந்த 13 ஆண்டுகளாக செயல் பட்டு வருகிறது. மாணவர்களின் தேர்ச்சி மற்றும் அவர்கள் பெறும் மதிப்பெண், கல்லூரி நிர்வாக செயல்பாட்டு திறன், கல்வி தரம் ஆகியவற்றின் அடிப்படையில் மாநில அளவில் சிறந்த கல்லூரியாக திகழும் கல்லூரியை மாநில கல்லூரி கல்வி ஆணையம் தர சான்றிதழ் வழங்குகிறது. அதை ஆய்வு செய்யும், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்.ஏ.ஏ.சி) சிறந்த கல்லூரிக்கு அதை உறுதி செய்து அங்கீகாரம் வழங்குகிறது.