புதுடெல்லி: இங்கிலாந்து அணியுடன் நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளதாக ஆஸி. முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கூறியுள்ளார். இது குறித்து நேற்று அவர் கூறியதாவது: கடும் சவாலாக அமைந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில், பல்வேறு பின்னடைவுகளையும் சமாளித்து சாதனை வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக நடக்க உள்ள தொடரிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும். அதிலும், கேப்டன் விராத் கோஹ்லி அணிக்கு திரும்புவது பேட்டிங் வரிசையை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்.