சென்னை கொரோனாவால் உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: எல். முருகன் வலியுறுத்தல் May 12, 2021 கொரோனா LLC முருகன் சென்னை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் LLC முருகன் தின மலர் சென்னை: கொரோனாவால் உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குமாறு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தி உள்ளார். “கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். கடந்த வருடம் ஏப்ரல் 15ஆம் தேதி திமுக உள்ளிட்ட 11 கட்சிகளின் கூட்டணியினர் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம், ஊதிய உயர்வு வழங்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தமிழக அரசு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தது என கூறினார். ஆகவே, உடனடியாக முதலமைச்சர் உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க உத்தரவிடக் கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். … The post கொரோனாவால் உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: எல். முருகன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
துணைப்பதிவாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதால் பொதுமக்களுக்கு விரைந்து சேவைகள் வழங்க முடியும்: அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்; அம்மா உணவக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: பார்முலா 4 கார் ரேஸ் நடத்த செலவு செய்த பணத்தை தமிழக அரசிடம் கேட்க தீர்மானம்
மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில் நிலத்தில் திருமண மண்டபம் கட்ட வேண்டும்: பேரவையில் எஸ்.ஆர்.ராஜா கோரிக்கை
ஏலகிரிக்கு சுற்றுலா சென்றபோது கார் டயர் வெடித்ததால் லாரி மீது மோதி சென்னை கல்லூரி மாணவி பரிதாப பலி: 3 மாணவர்கள் படுகாயம்
வழித்தட விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் மெட்ரோ ரயில்களில் டைனமிக் ரூட் மேப்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு திட்டங்களில் இடைத்தரகர்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர் எச்சரிக்கை