புதுச்சேரி: லாஸ்பேட்டை பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டி வழிப்பறி ஆசாமிகளை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி லாஸ்பேட்டையில் கடந்த 2 மாதத்தில் அடுத்தடுத்து பெண்களிடம் நகை வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றன. தலைமை செயலக அதிகாரியை தாக்கி அவரது மனைவியிடம் நகை பறித்த சம்பவத்தையடுத்து அங்கு டிஜிபி உத்தரவுக்கிணங்க ரோந்து பணிகள் முடுக்கி விடப்பட்டன. அதன்பிறகு லாஸ்பேட்டையில் வழிப்பறி நடைபெறாத நிலையில், தொடர்ச்சியாக நடந்த இச்சம்பவத்தில் ஒரே ஆசாமிகளே கைவரிசை காட்டியது காவல்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்தது.