மதுரை: தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணியை அமைக்க முடியும் என விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்தார். மதுரையில் தேமுதிக கட்சி நிர்வாகி இல்லத்திருமண விழாவில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் நேற்று பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. கொரானா பாதிப்பு தற்போது இல்லை. எந்த பிரச்னையும் இல்லாமல் நன்றாக உள்ளார். தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். செயற்குழு, பொதுக்குழு கூட்டி பணிகளை தீவிரப்படுத்துவோம். தேமுதிக ஆரம்ப காலத்தில் இருந்தே தனித்தே களம் இறங்கியுள்ளது. விஜயகாந்தும், பிரேமலதாவும் கட்சித்தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவார்கள். தேமுதிக தனித்து நிற்க எந்த அச்சமும் இல்லை.