சென்னை : இந்த ஆண்டாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவியருக்கு சிறு வயது முதலே மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்து வந்துள்ளது. இதனால் சுபஸ்ரீ பள்ளிப்படிப்பை முடித்துவிட்டுக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கோவையில் உள்ள அகாடமியில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்ததுள்ளார். அண்மையில் செப்டம்பர் மாதம் நீட், ஜெஇஇ நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கிடையே கடந்த முறை தோல்வி அடைந்ததால் அடுத்த மாதம் நடைபெறும் தேர்வில் தேர்ச்சி பெறுவோமா, என்பதில் சுபஸ்ரீ குழப்பத்தில் இருந்துள்ளார்.