அதன்படி, சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட தலைமை செயலக குடியிருப்பு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த ஓட்டேரியை சேர்ந்த பிரசாந்த் (24), புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட சையத் (24), நரேஷ்குமார் (24), அரும்பாக்கம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த விக்கி (எ) க்ரைம் விக்கி (25), கொடுங்கையூர் பகுதியில் திருட்டில் ஈடுபட்டு வந்த அரவிந்தன் (24), சைதாப்பேட்டை பகுதியில் கவுதம் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய தேனாம்பேட்டையை சேர்ந்த ராஜா (எ) ராஜாபாய் (28), தி.நகரை சேர்ந்த சுரேஷ் (27), பிரதீப் (26), மணிகண்டன் (30), கண்ணகி நகரை சேர்ந்த சுகுமார் (22) மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக மாங்காடு பகுதியை சேர்ந்த பால்ராஜ் (33), டி.பி.சந்திரம் பகுதியில் கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தொடர்புடைய ஓட்டேரியை சேர்ந்த சதீஷ்குமார் (21), எம்.கே.பி.நகர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட ராஜிவ் (எ) ராஜிவ்பாய் (25), கோயம்பேடு பகுதியில் முகமது ஆதாம் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய நெற்குன்றத்தை சேர்ந்த வெள்ளை செல்வா (23) என கடந்த 10ம் தேதி முதல் 16ம் ேததி வரையிலான 7 நாட்களில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 22 பேரை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 22 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.