அதேநேரம் தனது மனைவி ஜான்சி ஜெஸ்சியிடம் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும், அதனால் எனது சீருடையை அயன் செய்ய போகிறேன் என்று கூறிவிட்டு அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார். கணவன் வெகு நேரம் வெளியே வராததால் மனைவி ஜான்சி ஜெஸ்சி சந்தேகமடைந்து அறையின் கதவை பலமுறை தட்டியும் கதவை திறக்காததால் அச்சமடைந்து, அருகில் வசிக்கும் நபர்கள் உதவியுடன் அறையின் கதவை உடைத்து பார்த்த போது, மின் விசிறியில் மனைவியின் துப்பட்டாவால் ஜான் ஆல்பர்ட் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தார்.
அதன்பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஜான் ஆல்பர்ட்டை பரிசோதனை செய்துவிட்டு, அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதை கேட்டு அவரது மனைவி, 2 வயது குழந்தையுடன் கதறி அழுதார். தகவலறிந்த பட்டினப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உதவி ஆய்வாளர் ஜான் ஆல்பர்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்ேபட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக உதவி ஆய்வாளர் தற்கொலை ெசய்து கொண்டது தெரியவந்துள்ளது. இருந்தாலும், போலீசார் வேறு ஏதேனும் காரணமா என தொடர்ந்து விசாரிக்கின்றனர். மாநில உளவுத்துறை இளம் உதவி ஆய்வாளர் ஒருவர் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post பட்டினப்பாக்கம் காவலர் குடியிருப்பில் உளவுத்துறை எஸ்ஐ தற்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.