திருமலை: ஆந்திராவில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்வர் ஜெகன்மோகன் தெரிவித்தார். ஆந்திரா, குண்டூர் மாவட்டத்தில் உள்ள முதல்வர் ஜெகன் மோகனின் முகாம் அலுவலகத்தில், நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. பின்னர், ஜெகன் அளித்த பேட்டியில், ‘‘மருந்துகள், மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு, அடுத்த 6 மாதங்களில் துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் மருத்துவ சேவைகளுக்கான மருத்துவர்களை நியமிக்க 1,000 கோடி நிதி ஒதுக்கப்படும்.