சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் புற்றுநோய்க்கான தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. பிரபல மருத்துவமனை என்பதால் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு நோயாளிகளும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் மருத்துவமனையில் உள்ள தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பில் பேசிய மர்ம நபர் ‘உங்கள் மருத்துவமனையில் நான் வெடி குண்டு வைத்துள்ளேன். இன்னும் சற்று நேரத்தில் அது வெடிக்கும் முடிந்தால் எடுத்து கொள்ளுங்கள்’ என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனையின் வரவேற்பு அறை ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.