சென்னை: சென்னையில் இருந்து வெளிமாவட்டங்கள் செல்ல இ - பாஸ் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த சூழ்நிலையில் தான் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆதலால் சென்னையில் இருந்து மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல இ - பாஸ் கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இ - பாஸை பொறுத்தவரையில் பல நடைமுறைகள் உள்ளது. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல முதலில் அனுமதிப்பது அந்தந்த மாவட்ட நிர்வாகம் தான். தற்போது அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் மறைமுகமாக தகவல் செல்வதாக கூறப்படுகிறது. அதாவது சென்னையில் இருந்து யாரேனும் இ - கேட்டு விண்ணப்பித்தால் அதனை அனுமதிக்க வேண்டாம் என கூறப்படுவதாக தெரிகிறது. ஆதலால் சென்னை மக்கள் திருமணம், இறப்பு, மருத்துவ பிரச்சனை உள்ளிட்ட காரணங்களுக்குகாக இ - பாஸ் கேட்டு விண்ணப்பித்தால் அவை ரத்து செய்யப்பட்டு வருகிறது.