நீரவ் மோடி, மெகுல் சோக்சி வெளிநாட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1,350 கோடி மதிப்பிலான நகைகள் மீட்பு

மும்பை: நீரவ் மோடி, மெகுல் சோக்சி வெளிநாட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1,350 கோடி மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டுள்ளது. வங்கி மோசடியில் சிக்கி வெளிநாடு தப்பிய நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி ஆகியோர் ஹாங்காங்கில் பதுக்கி வைத்திருந்த ரூ.1350 கோடி மதிப்புள்ள வைரம், முத்துக்கள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் மும்பை கொண்டுவரப்பட்டன. ஏற்கனவே துபாய் மற்றும் ஹாங்காங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.137 கோடி மதிப்புள்ள நகைகள் இந்தியா கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் அமலாக்கத்துறையினர் மீண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: