சென்னையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மாநகராட்சி ஊழியர் நெஞ்சு வலியால் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சயளிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மாநகராட்சி ஊழியர் உயிரிழந்துள்ளார். சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த 59 வயது நபர் புரசைவாக்கத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 21-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கடந்த 28-ம் தேதி மருத்துவர்கள் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். அவரை தனிமையில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories: