சென்னை: வரும் ஜூன்8 ம் தேதி முதல் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் 2 அணைகளிலிருந்து தண்ணீரை திறந்துவிட ஆணையிட்டுள்ளதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்புகளில் உள்ள பாசனத்துக்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார்-1,2 அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.