4-ம் கட்ட ஊரடங்கில் என்னென்ன கட்டுப்பாடுகள் தளர்த்தலாம்?: தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை

சென்னை: தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். நாடு முழுவதும் 2வது கட்ட ஊரடங்கு வருகிற 17ம் தேதியுடன் முடிவடைவதால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் கடந்த 11-ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தி மாநில முதல்வர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். தொடர்ந்து, 3ம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி, 5வது முறையாக கடந்த 12-ம் தேதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது, நாட்டின் 4ம் கட்ட தேசிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவது மற்றவற்றில் இருந்து முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். 4ம் கட்ட ஊரடங்கை நீட்டிப்பது பற்றி மாநில அரசுகளே  முடிவெடுக்கலாம். மாநில அரசுகளின் பரிந்துரைப்படி 4ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றார். இதற்கிடையே, கடந்த 3-ம் கட்ட ஊரடங்கு நீட்டித்தப்போது, சில தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, பெண்கள் மற்றும் ஆண்கள் அழகு நிலையங்களை தவிர மற்ற அனைத்து விதமாக கடைகளும் கட்டுப்பாட்டுடன் திறக்கப்பட்டுள்ளன. 3-ம் கட்டமாக ஊரடங்கில் பல்வேறு தொழில்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனைபோல், 4-ம் கட்ட ஊரடங்கில் தொழில் நிறுவனங்களுக்கு விதிக்கப்படவுள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

இதன்படி, தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு காணொலி மூலம் ஆலோசனை  நடத்தி உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர்  பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று முன்தினம், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும், நேற்று சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடனும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: