தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் 102 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூரில் மே 7-ல் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அப்போது மணிக்கு 30 கி.மீ. முதல் 40 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்றுடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என்ற குளு குளு அறிவிப்பையும் வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதே போல், மே 8, 9 தேதிகளில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே அடுத்த 3 நாட்கள் உள் மாவட்டங்களில் அதிக வெப்பம் நிலவும்; அதற்கு அடுத்த 2 தினங்களில் வெப்பம் படிப்படியாக குறையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
The post கனமழையும் இருக்கு… வெப்ப அலையும் இருக்கு!.. அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்.. 7ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.