இந்நிலையில்தான் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீஸ் விசாரணைக்கு அனுப்பாமல் கடத்தியதாக எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரேவண்ணா, அவரது மனைவி பவானியின் ஆதரவாளர்களால் கடத்தப்பட்ட தனது தாயை மீட்டு கொடுக்கும்படி அவரது மகன் கே.ஆர்.நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த புகாரை அடுத்து ரேவண்ணா மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது காவல்துறை.
இதனிடையே பாலியல் புகாரில் சிக்கியுள்ள ரேவண்ணாவுக்கு சிறப்புப் புலனாய்வுக்குழு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 24 மணி நேரத்துக்குள் ஆஜராகவில்லை எனில் கைது நடவடிக்கை பாயும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ரேவண்ணாவின் மனைவி பவானிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கு மத்தியில் பாலியல் வழக்கில் முன்ஜாமின் கோரி ரேவண்ணா தாக்கல் செய்த மனு இன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு புலனாய்வு குழுவின் வழக்கறிஞர் ஆஜராகி, “ஆபாச வீடியோ வழக்கில் ரேவண்ணா முன் ஜாமீன் எடுக்க வேண்டிய அவசியமில்லை. ஜாமீன் பெறும் வகையில் ரேவண்ணா மீது வழக்குகள் பதியப்படவில்லை,”இவ்வாறு வாதிட்டார். இதைத் தொடர்ந்து ரேவண்ணா மனுவை வாபஸ் பெற்றார்.
The post எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு… 24 மணி நேரத்தில் ஆஜராகவில்லை எனில் கைது செய்ய நேரிடும் என போலீஸ் எச்சரிக்கை appeared first on Dinakaran.