விருத்தாசலம் அருகே மாம்பாக்கம் கிராமத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து 8 மாத கர்ப்பிணி உயிரிழந்தார். ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி இறந்த விவகாரத்தில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுரேஷ்குமார் – கஸ்தூரிக்கு திருமணம் நடைபெற்று 8 மாதங்களே ஆனதால் ஆர்டிஓ விசாரணை செய்து வருகிறது.
ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தென்காசி அருகே உள்ள மேல்நிலைய நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதம் ஆகிறது. கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இவர்கள் சென்னையில் வசித்து வரும் நிலையில் கஸ்தூரி தனது குடும்பத்தினருடன் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சங்கரன்கோவிலுக்கு கொல்லம் விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார். கொல்லம் விரைவு ரயில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தை கடந்த போது கஸ்தூரிக்கு திடீரென வாந்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அவர் ரயிலில் படிக்கட்டு பகுதிக்கு சென்று கதவு ஓரத்தில் வாந்தி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மயக்கமும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் நிலை தடுமாறி ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். கஸ்தூரி ரயிலில் இருந்து விழுந்ததைக் கண்ட அவரது உறவினர்கள் உடனடியாக அபாய சங்கிலியை இழுக்க முயன்றுள்ளனர். ஆனால், அது வேலை செய்யாத தால் பக்கத்து பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நடுவழியில் நிறுத்தினர். பின்னர் அவரது உறவினர்கள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி கஸ்தூரியை தேடினர். இந்நிலையில் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில் விசாரணைக் குழு அமைத்துள்ளனர்.
The post விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில் விசாரணைக் குழு அமைப்பு appeared first on Dinakaran.