இந்நிலையில்தான் பிரஜ்வல் ரேவண்ணா மீது இரண்டாவதாக ஒரு பெண் புகார் அளித்துள்ளார். பிரஜ்வல் தன்னை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக நீதிபதியிடம் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். பெண் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறப்பு புலனாய்வுக் குழு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. புதிய புகாரால் பிரஜ்வல் ரேவண்ணாவை உடனடியாக கைது செய்ய சிறப்பு புலானாய்வுக் குழு திட்டம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலியல் பலாத்கார வழக்கு ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் உள்ளதால் பிரஜ்வல் கைது செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. ஹொலேநரசிப்பூரில் முதலில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ரேவண்ணா முதல் குற்றவாளியாகவும் பிரஜ்வல் 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூருவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா மட்டுமே குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.முன்னதாக தந்தை ரேவண்ணா, மகன் பிரஜ்வல் ஆகியோர் வீடுகளில் சிறப்பு புலனாய்வு குழு நள்ளிரவில் சோதனை செய்து பல முக்கிய சாட்சியங்களை கைப்பற்றின.
The post பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் பிரதமர் தேகவுடாவின் பேரன் பிரஜ்வல் மீது புதிய வழக்கு : கைது செய்ய ஜெர்மனி விரைகிறது தனிப்படை? appeared first on Dinakaran.