சென்னை: சென்னை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து போலீசாருக்கு கடந்த மாதம் சென்னை ஐஐடி மாணவர்கள் தயாரித்த அதிநவீன முகத்தை மட்டும் மறைக்கும் முகக்கவசம் தயாரித்து வழங்கியது. அப்போது முதற்கட்டமாக 3 ஆயிரம் முகக்கவசம் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டது. மேலும், மாநகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கும் படிப்படியாக வழங்கப்பட்டது. ஆனாலும் வாகன சோதனை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு கொரோனா நோய் தொற்று அதிக எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.