மும்பை: நலிந்த நிலையில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு நிதி உதவி அளிப்போம் என முன்னாள் கேப்டன்கள் கபில்தேவ், கவாஸ்கர் உறுதி அளித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம்(ஐசிஏ) சார்பில் நலிவடைந்த நிலையில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுமார் 30 பேருக்கு நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளது. அதற்கு ஐசிஏ சார்பில் 10 லட்சம் உட்பட இதுவரை 39 லட்ச ரூபாயை பல்வேறு தரப்பினர் வழங்கியுள்ளனர். இந்நிலையில், முன்னாள் கேப்டன்கள் கபில்தேவ், கவாஸ்கர் ஆகியோர் தாங்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் நலநிதிக்கு பங்களிப்போம் என்று உறுதியளித்துள்ளனர். ஆனால் எவ்வளவு தொகை என்பது குறித்து இருவரும் இதுவரை ஏதும் அறிவிக்கவில்லை.