பொன்னேரி: பொன்னேரி சாமுண்டீஸ்வரி நகரைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (24). இவர், கடந்த 2017ம் ஆண்டு வியாபாரிகளுக்கு கொலை மிரட்டல், வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய வழக்குகள் பொன்னேரி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. ஸ்டீபன், கடந்த 4 ஆண்டுகளாக போலீசாரிடம் பிடிபடாமல் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இதனையடுத்து, பொன்னேரி உதவி கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி மேற்பார்வையில், பொன்னேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், எஸ்ஐ மகாலிங்கம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து போலீசார், ஸ்டீபனை வலைவீசி தீவிரமாக தேடி வந்தனர்.