தண்டையார்பேட்டை: இலங்கையைச் சேர்ந்தவர் முகமது முஷ்மில் (42), வைர வியாபாரி. இவர் இலங்கையில் இருந்து கடந்த மாதம் 26ம் தேதி வைர வியாபாரம் செய்ய சென்னை மண்ணடி வந்து, மூர் தெருவில் உள்ள ஒரு மேன்சனில் தங்கி உள்ளார். அப்போது 4 பேர் முகமதுவிடம் வைர கற்களை வாங்க வந்துள்ளனர். அங்கு, முகமதுவிடம் விலை உயர்ந்த வைர கற்கள் இருந்துள்ளதை பார்த்துள்ளனர். வைர கற்களை வாங்கி பார்ப்பது போல் பார்த்துவிட்டு, நூதன முறையில் ₹10 லட்சம் மதிப்புள்ள வைர கற்களை அபேஸ் செய்து சென்றுள்ளனர். அவர்கள் சென்ற பிறகு முகமது தன்னிடம் இருந்த வைர கற்களை பார்த்தபோது மாயமானது தெரிந்தது. இதுகுறித்து முகமது முஷ்கில் வடக்கு கடற்கரை போலீசில் புகார் செய்தார்.