புதுடெல்லி:ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது செயல்பாட்டில் இருந்த திட்டக் கமிஷனின் துணைத் தலைவராக இருந்த மான்டெக் சிங் அலுவாலியா எழுதிய `பின்புலம்’ புத்தகத்தின் வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: தற்போதைய மத்திய அரசு பொருளாதார மந்தநிலையை, வீழ்ச்சியை ஒப்புக் கொள்ளாமல் இருக்கிறது. இது நாட்டிற்கு நல்லதல்ல. அரசு, அது எதிர்க்கொள்ளும் பிரச்னையை அங்கீகரிக்காவிட்டால், அதனை திருத்திக் கொள்வதற்கான நம்பத்தகுந்த தீர்வு காண முயற்சிக்காது. இது மிகவும் ஆபத்தானது. இது விவாதிக்கப்பட வேண்டியது.
