சென்னை: சிண்டிகேட் வங்கி சார்பில், குறு சிறு நடுத்தர தொழில்கள் திட்டம் (எம்எஸ்எம்இ) மற்றும் நிதி விழிப்புணர்வு வாரம், கடந்த 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை கொண்டாடப்பட்டது. மண்டல துணை மேலாளர் ஜெகதீசன், உதவி பொது மேலாளர் பாலாஜி, துணை தலைவர் சத்யபால், மண்டல மேலாளர் தாமஸ் உள்பட அதிகாரிகள், சிண்டிகேட் வங்கி கிளை மேலாளர்கள் 60 வாடிக்கையாளர்களுடன் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நடப்பு நிதி ஆண்டின் 3ம் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் குறித்து விளக்கப்பட்டது. வங்கியின் நிகர லாபம் ₹430 கோடியாக ஈட்டப்பட்டுள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டது.