தஞ்சை: டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய காலதாமதம் ஏற்படுவதாகவும், மூட்டை ஒன்றுக்கு ரூ.40 வரை கட்டாய வசூல் செய்யப்படுவதால் நாள் ஒன்றுக்கு 500 முதல் 750 வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது என்றும் விவசாயிகள் புகார் கூறி வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை தஞ்சை மாவட்டத்தில் சூரக்கோட்டை, மடிகை உள்ளிட்ட 184 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் சுதாதேவி, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சை முதுநிலை மண்டல மேலாளர் கதிரேசன் ஆகியோர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கறார் வசூல் ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்ட்: தஞ்சையில் அதிகாரிகள் அதிரடி
- புகலிடம் அதிகாரிகள்
- அரசு கொள்முதல் மையம்
- ஏழு விவசாயிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்
- அரசாங்க கொள்முதல் மையங்கள்