புதுடெல்லி: இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் 5 எம்பி.க்கள் குழு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதன் மீது நேற்று ஓட்டெடுப்பு நடப்பதாக இருந்தது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற தலைவர் டேவிட் மரியாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பை ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் மார்ச் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது. இது இந்தியாவின் தூதரக அளவிலான பேச்சுவார்த்தைக்கு கிடைத்த வெற்றி என கூறப்படுகிறது. பிரதமர் மோடி மார்ச் மாதம் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸ் செல்கிறார். இதுவும் ஒத்திவைப்புக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.