ஒடிசாவில் இவிஎம்யை சேதப்படுத்திய பாஜ வேட்பாளர் கைது

புவனேஷ்வர்: ஒடிசாவில் பாஜ எம்எல்ஏ பிரசாந்த் ஜக்தேவ் குர்தா பேரவை தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த சனிக்கிழமை நடந்த தேர்தலில் பெகுனியா சட்டப்பேரவை பிரிவில் போலோகாட் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க பிரசாந்த் ஜக்தேவ் தன் மனைவியுடன் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த தேர்தல் அதிகாரிக்கும், பிரசாந்த் ஜக்தேவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பிரசாந்த், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை இழுத்த தள்ளியதால் அது கீழே விழுந்து உடைந்துள்ளது. இதுகுறித்து புகாரின் அடிப்படையில் பிரசாந்த் ஜக்தேவ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

 

The post ஒடிசாவில் இவிஎம்யை சேதப்படுத்திய பாஜ வேட்பாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: