வேலூர்: பொங்கல் பண்டிகையையொட்டி திமுக சார்பில் மக்கள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. திமுக பொருளாளர் துரைமுருகன், வேலூர் எம்பி கதிர்ஆனந்த், கிழக்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான ஆர்.காந்தி, வேலூர் மத்திய மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் திமுக பொருளாளர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் கிராமங்கள் தோறும் விளையாட்டு மைதானம் அமைப்பதாக கூறி பணத்தை அவர்களே எடுத்துக்கொள்வார்கள். இதற்காகத்தான் இத்திட்டத்தை செயல்படுத்துகின்றனர். அதேபோல ஏரிகளை தூர்வாருகிறோம் என்று கூறி, விவசாயிகளை ஏரி மண்ணை எடுத்துக்கொள்ள சொன்னார்கள். தற்போது தூர்வாரியதாக அதற்கும் பில் போட்டு பணத்தை எடுத்துக்கொண்டனர்.