கொடைக்கானல்: கொடைக்கானலில் 2 மாதத்திற்கு பின் பியர் சோழா அருவி திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொடைக்கானல் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது கரடி சோலை நீர்வீழ்ச்சி எனும் பியர் சோழா அருவி. வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதாக கூறி கடந்த 2 மாதங்களாக இந்த நீர்வீழ்ச்சிபகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இதன் நுழைவுவாயில் வனத்துறையினரால் மூடப்பட்டது. இதனால் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் இந்த நீர்வீழ்ச்சியை காண முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.