சென்னை: சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த கடந்த 25ம் தேதி முதல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முகாமிட்டிருந்தார். குழந்தை பிணமாக மீட்கப்பட்ட பிறகு, மருத்துவமனையில் இருந்து அவர் எழுதிய கவிதை: நான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுஜித்தின் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது. என் மனம் வலிக்கிறது. எப்படியும் வந்துவிடுவாய் என்றுதான் ஊனின்றி உறக்கமின்றி இரவு பகலாய் இமைமூடாமல் உழைத்தோம். இப்படி எம்மை புலம்பி அழவிடுவாய் என்று எண்ணவில்லை. கருவறை இருட்டுபோல் உள்ளே இருப்பாய் என நினைத்தோம். கல்லறை இருட்டாய் மாறும் என்று எண்ணவில்லை.