கொல்லம்: ‘‘இந்திய கடலோர பகுதிகளில் அண்டை நாட்டு தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குலை நடத்தக்கூடும்,’’ என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். கேரளாவின் கொல்லத்தில் மாதா அமிர்தானந்தமயி தேவியின் 66வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: கட்ச் முதல் கேரளா வரை நீண்டுள்ள நமது கடலோர பகுதியில், அண்டை நாட்டு தீவிரவாதிகள் மிகப் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தலாம் என்பதை நிராகரிக்க முடியாது. ஆனால், அவற்றை முறியடிக்கும் அளவில் நமது கடலோர படைகள் வலுவாகவும், உறுதியாகவும் உள்ளன.