சென்னை: தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலணம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகை, நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.